Saturday, April 30, 2011

மதுரை -- இன்று

மதுரையின் வடக்குப் புறத்திலிருந்து ஊருக்குள்ளே போய்த் திரும்பி வரும் வழிகளில் ...

1. மேல்பாலம் ...



2. மஞ்சனக்காரத் தெருப் பக்கம் ... சுங்கடிப் புடவைக் கடையைத் தேடிப் போனபோது ...




3. மேல மாசி வீதியில் ... இம்மையில் நன்மை தருவார் கோயில் ...



4. மேல மாசி வீதியில் ... பழைய "உடுப்பி" உணவகம் புதியவர் வருகையில் "போத்தீஸ்" ஆக மாறி ...



5. மேல மாசி வீதியில் (~ 1951 - 1962) நாங்கள் குடியிருந்த வீட்டின் முகப்பு.  இன்று நிறைய மாற்றம். நல்ல அகலமாக இருந்த முன்பக்கத்தைப் பிரித்திருக்கிறார்கள். நல்ல வேளை, தொட்டடுத்த சந்து இடிபடாமல் இருக்கிறது.



6. மேலமாசி வீதியும் (பழைய நாள்) சின்னக்கடைத் தெருவும் (அதாவது இன்றைய நேதாஜி ரோடும்) கூடும் இடத்தில் ... மீனாட்சி + சொக்கருக்குப் "பூமாலை போட்டு, பூக்கொட்டும்" பந்தல் -- சித்திரைத் திருவிழாவிற்காக அமைத்தது. பந்தலின் மேற்புறத்துக் கோடியில் இடது, வலது பக்கங்களில் தொங்கும் பொம்மைகள் காலை வேளையில் "கூண்டு"க்குள் அடைபட்டுக் கிடக்கின்றன; மாலையில் மீனாட்சியும் சொக்கரும் வீதி வலம்போது கூண்டிலிருந்து வெளியேறிவிடும் -- மாலை போட்டு, பூக்கொட்ட!



7. அந்தக் காலத்தில் ... சின்னக் கடைத் தெரு என்றும் பூக்கடைத் தெரு என்றும் சொல்லப்பட்ட தெரு. இப்போது ஒரு பூவையும் காணோம். இந்தத் தெரு வழியாகத்தான் அப்பா என் கையைப் பிடித்துக்கொண்டு என்னைப் பள்ளிக்கூடத்துக்குக் கூட்டிப் போவார். தெருவின் முடிவில், படத்தில் நேர் எதிரே தெரிவது முன் ஒரு காலத்தில் "பழைய ஆஸ்பத்திரி" இருந்த இடம். அந்த வளாகத்தில்தான் நான் படித்த "அரசினர் மகளிர் பள்ளி" இருந்தது.  "பழைய ஆஸ்பத்திரி"ப் பள்ளிக்கூடம் என்று சொன்னாலே புரியும்!



8. வடக்கு வெளிவீதியில் ... சேதுபதி உயர்நிலைப் பள்ளி ... . கூர்ந்து பார்த்தால் பாரதி சிலை தெரியும். நேரே நுழைந்து இடது பக்கமாகப் பின்புறம் போனால் இருக்கும் (?) இருந்த (?) திறந்த வெளியில் என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம் நாடகம் போடுவார்கள். உள்ளே ராமண்ணா ஹால் -- இசைக் கச்சேரிகள் நடந்த (நடக்கும்?) இடம்!




9. "தமிழ்ச்சங்க(ம்) ரோடு"! செந்தமிழ்க் கல்லூரி ...



10. சிம்மக்கல். இந்தப் பிள்ளையார் புதுசு போல! முன்னே பார்த்த நினைவில்லை. பிள்ளையார் சிலைக்குக் கீழே இருக்கிறது இந்த இடத்துக்குப் பெயர் தந்த "சிம்மம்."



11. சிம்மக்கல்லில் ... பழைய சொக்கநாதர் கோயில் -- தெரு மூலையில் தெரிவது.



12. விளக்குத்தூண் ("சந்திப்பு" என்று சொல்லலாமா?)



13. யானைக்கல்.



14. மைய மண்டபம் (வைகை ஆற்றில்) . அழகர் இறங்கக் காத்திருக்கும் நிலையில்.



15. இளங்கோ பாடிய "வையை என்ற பொய்யாக் குலக்கொடி"? எதற்கும் இடம் தரும் மகராசி?








16. கோரிப்பாளையம். காலால், வண்டியில் ... என்று எப்படியும் அங்கே இங்கே போய்வருவோம்!



17. கோரிப்பாளையம் ... நவநீத கிருஷ்ணன், சக்கரத்தாழ்வார் கோவில்


Friday, April 29, 2011

மதுரை -- செட்டிநாடு போனபோது ...

மதுரையிலிருந்து செட்டிநாடு நோக்கிப் போன வழியில்...


1. யானைமலை



2. திருமோகூர்க் கோவில் ...


2. a: கொடிக் கம்பம் ...






2. b: மன்மதன், இரதி ... எதிரும் புதிருமாய் ...



இரதியின் கையை உடைக்க எவருக்குத்தான் கிறுக்குப் பிடித்ததோ?




2. c: ஆண்டாள் ... பரந்தாமனைத் தொட்டடுத்து; எங்கே அவன்?






... இதோ ... இங்கே ... அங்கே ...





3. மேலூர் சாலையில் ... வழு வழு கல்லாக மாறக் காத்திருக்கும் பாறைகள் ...


4. ஆத்தங்குடி, செட்டிநாடு. ஒரு வீட்டின் நுழைவாயில் ...
(தொடரும்)

Monday, March 21, 2011

மதுரை முழுநிலா ... பங்குனியில் ...


அன்று வந்ததும் இதே நிலா?



இன்று வந்ததும் அதே நிலா?



மாற்றம் ...

தாழ் தெரு பெற்றது ... புழுதி ... குழல் விளக்கு ...


மேல் மாடி துறந்தது ... இனிய நிலாச் சோறு! 

Saturday, March 19, 2011

மதுரை இளவேனில் ...

"காலங்களில் அவள் வசந்தம்" -- கண்ணதாசன் காவியத்தை மறந்தவர்கள் இயற்கை அழகைச் சுவைக்கத் தவறியவர்கள்!

இந்த ஆண்டு என் சுவைக்கு விருந்தான சில இங்கே...

1. "மலர்களிலே அவள் மல்லிகை" ... மதுரையரசி!



2. விவேகம் ... இளமைக்கு வழிவிட்டு ...





3. நெளிவு சுளிவு வளைவுகளின் கொண்டாட்டம் ...




4. வேம்பூபூபூஊஊஊஊஊ ...





5. நிழலைத் தாங்குவோம் ...



6. யான் உனைத் தொடர்ந்தே ... ... ...



... ... ... சிக்கெனப் பிடித்தேன்!!



Sunday, March 13, 2011

என் மதுரை ...

எங்கள் குடும்ப நண்பர் ... நிழற்படக் கலை, வரைபடக் கலை இவைகளைத் தம் கண்ணிலும் கருத்திலும் கையிலும் வாங்கி, நம்முடன் பகிர்ந்துகொள்ளும் கொடையாளர் ... எல்லாவற்றிலும் மேலாக ... அன்பு உள்ளமும் இனிய பண்புமே வடிவானவர் ... இப்போது சென்னையில் வாழும் பழைய மதுரை மகன் ... திரு மனோகர் தேவதாஸ்.

மனோகரின் படைப்புகளுள் ஒன்று: Multiple Facets of My Madurai . முதல் பதிப்பு 2007. ISBN 13: 978-81-88661-62-6

அந்தப் படைப்பின் முகவுரைத் தொடக்கம்:

"This portfolio presents the city of Madurai in southern India through a collecion of intricately detailed pen and ink drawings with accompanying text. The book gives glimpses of the city's monuments and street houses, its temples and festivals, its surrounding countryside ... glimpses of the city's history, its traditions and its social ethos, often viewed nostalgically through the lens of my memory and art ... Above all this portfolio is an expression of one individual's love for his boyhood town."

பழைய கால (?!) மதுரையின் பல்வேறு சாயலைக் கண்ணையும் கருத்தையும் கவரும் 69 படங்கள் + விளக்கம் மூலம் வழங்கும் இந்தக் கருவூலத்திலிருந்து சில மணிகள் இங்கே...


1. நூலின் முதல் பக்கங்கள்









2. வடமேற்கு மதுரையில் ஒரு தெரு. நீர் மோர்ப் பந்தல்.



3. வடக்கு மாசி வீதியில் ...



4. மகாசதாசிவமூர்த்தி, 25 தலை 50 கைகளுடன் ...



5. அமெரிக்கன் கல்லூரி


இப்படிப் பல அழகு!