Friday, October 15, 2010

ரசமோ ரசம்...

"சுள்"-ன்னு ஒரு மிளகு-சீரக ரசம்.
(அம்மா செஞ்சது...)

1. ஒரு சிறிய எலுமிச்சையளவிற்குப் புளி எடுத்து (மண், கல், கொட்டை நீக்கி), நீர்க்கச் சாறு எடுத்துத் தனியே வைக்கவும்.

2. உள்ளங்கையளவு துவரம்பருப்பு, 5~6 மிளகு, 1/2 teaspoon சீரகம், 2~3 வற்றல் மிளகாய் ("செத்தல் மிளகாய்") -- இவற்றைத் தூசி போக எடுத்து, tea வடிகட்டியில் போட்டுக் கழுவியெடுத்து, கொஞ்சம் தண்ணீரில் ஊறவைக்கவும்.

3. ரசம் வைக்கும் பாத்திரத்தில் ("ரசச் சொம்பு") புளிச்சாற்றை ஊற்றி, 2~3 வற்றல் மிளகாய் கலந்து கொதிக்க வைக்கவும். (மிகச்சிறிய அளவு உப்புச் சேர்க்கலாம்.) புளியின் பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடவேண்டும்.

4. (புளிக் கரைசல் கொதித்துக் கொண்டிருக்கும்போது) நன்கு ஊறியிருக்கும் துவரம்பருப்பு, மிளகு, சீரகம், வத்தல் இவற்றோடு கறிவேப்பிலை இதழ்கள் 4~5 சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

5. அரைத்த விழுதை, புளிக்கரைசலில் கலந்து தேவையானால் சிறிது தண்ணீர் சேர்த்து, கொதிக்கவிடவும். (பக்கத்திலேயே இருந்து கவனிக்கவேண்டிய விஷயம்!)

6. மேலே சொன்ன புளிக்கலவையைக் கரண்டியால் ஒரே ஒரு தடவை கலக்கிவிட்டு, அப்புறம் கரண்டியால் அந்தக் கரைசலைத் தொந்தரவு செய்யாமல் பார்த்துக்கொண்டிருந்து, "மொச்" என்று கொதி வரும்வரை கொதிக்கவிடவும்!! படம் பார்க்க:



7. ரசம் பொங்கிவரும்போது, பாத்திரத்தை அடுப்பிலிருந்து எடுத்துவிடவும்.

8. கடுகும் கறிவேப்பிலையும் தாளிக்கவும்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
"கம்" என்று ஒரு பருப்பு ரசம்
(பையன் செஞ்சது...)

2 comments:

  1. நல்லதொரு ரசம் செய்தால், அது 'கம கம' என்று மணக்குமே. அத்தருணம் 'கம்' என்று இருக்கலோமோ, ஐயா? சீரா ரசம் 'சுள்' என்றிருந்தாலும், அதன் மென்மை கருதி, 'சுல்' என்ற சொல்லை பொருத்த, அதுவும் காலாவட்டத்தில் 'சல்' என்று திரிபில் முடிய ' சல் சல் ரினோ ரசம்' என்று இன்றைய தெனாவெட்டு.

    ReplyDelete
  2. அவனா? சத்தம் போடாம "கம்"-னு சாப்பிட்றுவான்! அதனால்தான் அப்படி எழுதினேன்! "சல் சல் ரினோ ரசம்" நல்ல "புண்யாஹவசனம்!" நன்றி!

    ReplyDelete