Thursday, August 16, 2012

பாதையோரப் பரிசு ...
----------------------------------
என் வீட்டருகில் நடந்து போகும்போது பல அமைதியான இடங்கள் குறுக்கிடும். அங்கே அழகான பூக்களும் குறுக்கிடும். உண்மையில் அவற்றைத் தள்ளிவிட்டுத்தான் என் நடையுதவியைக் கொண்டுபோக முடியும்.  

அப்படி நடந்துபோன சில நாட்களில் நான் சுவைத்த காட்சிகள் இங்கே.

1. இது மெக்னோலியா (magnolia) மரத்திலிருந்து கீழே விழுந்த இலை. நிறத்தையும் பளபளப்பையும் பாருங்கள். இறந்தபின்னும் புகழ்! :-)





2. மெக்னோலியா மொட்டு.



3. இந்தப் பூவின் பெயர் லில்லி ஆஃப் த நைல் (lilly of the Nile). மிக அழகு ஊதா நிறம். நத்தைகளுக்குப் பிடித்த செடி!




4. இந்தப் பூவின் பெயர் தெரியவில்லை. ஆனால் பல நிறக் கலவை என்னைக் கவர்ந்தது.


5. இந்தப் பூவின் பெயரும் தெரியவில்லை. காலையில் எடுத்த படம் இரவில் எடுத்ததுபோன்ற தோற்றம்.



6. ஐரிஸ் போல, ஆனால் திட்டமாகத் தெரியவில்லை. ஆர்க்கிட் போல, ஆனால் ஆர்க்கிட் இல்லை.




7. மதுரை உதயசங்கருக்குப் போட்டியாக ... (ஃபோட்டோஷாப் வேலை இல்லவேயில்லையாக்கும்!)


நம்மைச் சுற்றி இயற்கை அழகு நிறைந்திருக்கிறது. கண்டும் கேட்டும் சுவைக்காவிட்டால் நமக்குத்தான் இழப்பு.  இயற்கையைச் சுவைப்போம். நன்றி சொல்வோம்.

4 comments:

  1. இந்த எழில் டானிக் படங்கள் என்னை பரவசப்படுத்துகின்றன. அவற்றை நேரில் கண்டு களித்தேன். அந்த பக்கம் மக்னோலியா மரங்கள், வழி நெடுக. ராஜம் வீட்டு ஆப்பிள் மிகவும் இனிமை. அந்த கருவேப்பிலை இருக்கே, அது குடும்பமாக வாழ்வதை அங்கு தான் கண்டேன். மெகா எலுமிச்சை கனிகள்.
    இன்னம்பூரான்

    ReplyDelete
  2. எம்மா ...ஒலகப் பார்வையம்மா இது .... நாங்க எல்லாம் எந்த மூலைக்கு

    ReplyDelete
  3. கலிஃபோர்னியாவில்
    ஒரு குறிஞ்சிப் பாட்டு !
    மலர்களின் அழகு
    மனத்தைக் கவர்கிறது


    தேவ்

    ReplyDelete
  4. அக்கா,
    அருமையா படங்கள், அதுபும் போ.சா.இல்லாமேலேயே.

    2. மெக்னோலியா மொட்டு அருமை,
    மலர்ந்தபின் படம் எடுத்த படம் இருந்தால் பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    அன்புடன்
    தம்பி
    காளை

    ReplyDelete