Saturday, September 15, 2012

பாதையோரப் பரிசு ... (4) 


அன்று ஒரு நாள் காலையில் வெளியே நடந்து சென்றபோது ... மெக்னோலியா (magnolia) மரங்களிடம் கேட்டுக்கொண்டே நடந்தேன்: 'ஊர்லெ ஒரு தம்பி இருக்கு; அதுக்கு ஒன் பூவெப் பாக்கணுமாம். என் கண்ணுலெ ஒரு பூவைக் காட்டேன்' என்று. ஆ! என் வேண்டுதலுக்குச் செவியையும் பூவையும் சாய்த்தது ஒரு மரம்! கண்ட காட்சி ... இங்கே முதல் படத்தில்.


1. ஒரு மெக்னோலியாப் பூ (magnolia) முனைவர் காளைராசனுக்காகவே என் கைக்கு எட்டும் தொலைவில் பூத்திருந்தது!!!




2.   நாங்க இந்த ஊர் அரளிப்பூவாக்கும் ...




3. ஒங்க ஊர்லெ எங்களுக்கு நல்ல பேர் இல்லெ (பீரோஜா/பீநாறி-னுவீங்க). ஆனா, இங்கே நாங்க நல்லாவே இருக்கோம்!




4. பாரு பாரு, என் தங்க நெறத்தெப் பாரு!



5.   நாங்க புதுசா ... புதுசாக் கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க ...




அட ... இவ்ளோ சீக்கிரமா ... குடும்பம் பெருகிப்போச்சா?!!!



6. பூச்சாண்டி மாதிரி ஒரு முகம் தென்படுகிறதா? 



ஆனா, நாங்க எல்லாரும் பூச்சாண்டியில்லெ!




7. என் வீட்டு வாசற்படிக்கு அருகில், சின்ன செடியில். நல்ல மணம்! ஆனால் ... வண்டிகளின் புகை புழுதிகளுக்கு இடையில் அந்த மணத்தை நுகரத் தனி நயம் வேண்டும்!




8. கால மாற்றத்தைத் தெரிவிக்கும் வானிலை அறிக்கையாளர்கள்!




1 comment:

  1. வானிலை அறிக்கையாளர்கள் அருமையான நிறத்தில் காட்சி கொடுக்கிறாங்க. எல்லாப் படங்களுமே அருமை தான்.

    ReplyDelete