Monday, January 14, 2013

காய், காய், என்ன காய் செய்யலாம்? கழுதை கெட்டா ...

கழுதை கெட்டா ... குட்டிச்சுவர்! தெரியும்.

அதே போல ... என்ன சமைக்க? என்ன இருக்கு? என்று தேட நேரமில்லாமல் போகும்போது ... கைகொடுக்கும் தெய்வச் சமையல் -- ஒரு வகைக் கறி!

1. கொஞ்சம் தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் வதக்கி எடுத்துக்கொண்டு தனியாகக் கடுகு தாளித்துச் சேர்க்கவும்:



2. வெந்த பயறு வகை ஒன்றை எடுத்துக் கொள்ளவும். இங்கே உள்ளது பின்ட்டோ பீன்ஸ் (pinto beans).
      (காய்ந்த பயிறு இருந்தால் ஊறவிட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். அதுவே இங்கே.)



3. பச்சைக் காய் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளவும். இங்கே பயன்படுத்திய காயின் பெயர் ப்ரோக்கலி (broccoli).


  
4. மேற்கண்ட பச்சைக்காய்த் துண்டுகளை மிதமான சூட்டில் வேகவைத்து எடுக்கவும். குழையவிடவேண்டாம். பச்சை நிறம் மாறக்கூடாது.


5. தக்காளிக் கலவையில் பருப்பும் பச்சைக் காயும் சேர்த்துச் சிறிது நேரம் ( ~15 மணித்துளிகள்) வேகவைக்கவும்.



6. தேவையானால் சிறிது உப்பும் பெருங்காயமும் வதக்கிய இஞ்சியும் சேர்த்துக்கொள்ளவும்.

7. பச்சைக் கறிவேப்பிலை இதழ்களையும் சேர்க்கலாம்.

குறிப்பு: பருப்பும் (beans) ப்ரோக்கலியும் சிலருக்கு வாயுத் தொந்தரவு கொடுக்கலாம். அதனால் இஞ்சியும் பெருங்காயமும் சேர்ப்பது உதவும். பூண்டும் சேர்க்கலாம்.

சத்துள்ள உணவு. சப்பாத்தி, ரொட்டி, சோறு போன்றவற்றோடு சேர்த்துச் சாப்பிடலாம். அளவோடு சுவைத்து உண்டு மகிழ்ந்து பயன் பெறுக!

1 comment: