Sunday, November 7, 2010

நூல்கோல் கூட்டு...

1. நூல்கோல் (kohlrabi)




2. சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.



3. சிறிதளவு கடலைப் பருப்பு அல்லது பாசிப்பருப்புடன் சேர்த்து, கடிபதத்துக்கு (fork-tender) வரும்வரை வேகவைக்கவும்.

4. மசாலா: துருவிய தேங்காய் வறுத்தது, உளுத்தம்பருப்பு, மிளகாய் வத்தல் இவற்றை அறைத்து எடுத்துக்கொள்ளவும்.



5. வெந்த காயில் மசாலாவைச் சேர்த்து, பச்சை வாசனை போகும்வரை (10 மணித்துளி போல) கொதிக்கவிடவும்.

6. சிறிதளவு பெருங்காயம், பச்சைக் கறிவேப்பிலை சேர்க்கவும். கடுகு தாளிக்கவும்.



சுவைத்து உண்க!

1 comment: