Wednesday, August 31, 2011

திருப்பூவணம் -- 4 -- பிறரும் நாயன்மாரும் ...

"திருப்பூவணம் -- 3 -- கடவுளரும் பிறரும்" ... என்ற பதிவில் ... "எடுத்த எல்லாப் படங்களையும் இணையத்துக்கு ஏற்றபடித் தயார்செய்ய முடியவில்லை. அதனால் இதுவே திருப்பூவணம் பற்றிய கடைசிப் பதிவு." என்று முடிவு எடுத்திருந்தேன்.  

ஆனால் ... முனைவர் காளைராசனின் திருப்பூவணப் படங்கள் என் ஆசையைத் தூண்டிவிட்டன!  அதனால் என் முயற்சி தொடர்ந்தது! என் படங்களின் தன்மை அவ்வளவு சிறப்பாக இருக்காது -- சின்னஞ்சிறிய கருவியினால் எடுத்தவை, இருட்டாக இருந்த இடங்களில்; அதோடு ... கொஞ்ச நேரம்கூட ... சரியாக நிற்கக்கூட முடியாத நிலையில்.


1. இறைவன் திருமுன் காப்பாளர் இருவர் ("துவார பாலகர்")







2. முருகன்




3. பிள்ளையார். இவர் "அனுக்ஞை விநாயகர்" என்று கோவில் சொல்கிறது. யாருக்கு என்ன கொடுப்பார் என்று தெரியவில்லை.



4. தென்பக்கம் நோக்கிய கடவுள் வடிவம் ("தட்சிணாமூர்த்தி")



5. காய்ச்சல் கடவுள் ("ஜொர தேவர்"). இவருக்கு 4 முகங்கள். இவரை வேறு எங்கும் நான் பார்த்ததில்லை (என் அறியாமை?).


6. கார்த்திகேயன்



7. கலைக் கடவுள் ("சரஸ்வதி")



8. வித்தைக்கடவுளர் இருபக்கம் இருக்க ... பெண் கடவுளர் வரிசை ...




9. நாயன்மாரும் பிறரும் ... ஒழுங்கு வரிசை ... தொடக்கமும் தொடர்ச்சியும் ...









































 10. நாயன்மாரும் பிறரும் ... ஒழுங்கு வரிசை ... நிறைவுப் பகுதி



இங்கே என்னால் பகிர்ந்துகொள்ள முடிந்தது மிகவும் சிறிய அளவு.

மின்னாளின் சந்நிதியில் நிறுத்தப்பட்டிருந்த உற்சவ வாகனங்கள் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்து. அவற்றைப் படம் எடுக்க இயலவில்லை (உடல் நலக்குறைவும் நேரம் போதாமையும்).


இயன்றால் எல்லாரும் நேரில் கண்டு பாராட்டிப் போற்றிக் காக்க வேண்டும்; அவ்வளவு அழகிய கலை நுணுக்கம் மிளிரும் ஆடம்பரமில்லாத அமைதியான துப்புரவான கோயில், வையை ஓடும் அருகில்!


2 comments:

  1. திருக்கோயிலூர்கள் எல்லாவற்றிலும், தலபுராணங்கள் கூட, இது போன்ற அரிதிலும் அரிய (கால் வலி புரிகிறது) சித்திரப்புராணங்களின் ஆன்மிகம், இறையார்வம் அணி வகுக்கவேண்டும். எனக்கு திருப்பூவணம் சென்று விடலாமோ என்று தோன்றுகிறது.நன்றி பல.

    ReplyDelete
  2. அருமையாக படம் எடுத்திருக்கிறீர்கள் அம்மா.பொறுமையாக வலையேற்றி எங்களுக்கும் தரிசனம் பெறச் செய்தமைக்கு நன்றிகள் பல.

    ReplyDelete